கவிதை

மனிதா , நீ இயங்கிகொண்டிரு

அண்ட வெளியில் அற்ப புள்ளியாய் பூமி
அதில் ஊதாமல் பறக்கும் தூசியாய் நாம்
வான் புகழும் , வரலாறும் பூமி புள்ளிகுள்ளேயே மங்கும் வெளிச்சம்
கால சக்கரத்தின் கழற்றி எறியப்பட்ட ஆணி !
உண்மை தான் – எதிலும் உண்மையில்லை என்பது , ஆதலில்
தேடி தொலையாமல், ஓடி ஒளியாமல் – இயங்கி கொண்டிருப்போம் – ஏனெனில்
இயக்கம் தான் மனிதனின் உன்னதம் – முடக்கமல்ல !
விழித்தால் தான் சில தினங்கள் விடியும்
நடந்தால் தான் எதையும் அளக்கவும் முடியும்.
என்ன செய்வாய் நாளை ? என்று யாராவது [...]

தற்கொலைகள்

முழுமையாக நினைக்கவோ , உணரவோ முடியவில்லை, அவர்களின் வேதனைகளை
அவர்களின் கடைசி நேர முகபாவங்கள் மனதினில் பிம்பமாவதற்க்குள் மங்கிவிடுகின்றன.
முடிந்தால் தற்கொலையில் இறந்தவர்கள் அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும்
திரும்பவும் வாழ்விப்பதற்காக மட்டுமின்றி, “ஏன்?” என்று மட்டும் கேட்க வேண்டும் எனக்கு