அண்ட வெளியில் அற்ப புள்ளியாய் பூமி
அதில் ஊதாமல் பறக்கும் தூசியாய் நாம்

வான் புகழும் , வரலாறும் பூமி புள்ளிகுள்ளேயே மங்கும் வெளிச்சம்
கால சக்கரத்தின் கழற்றி எறியப்பட்ட ஆணி !

உண்மை தான் – எதிலும் உண்மையில்லை என்பது , ஆதலில்
தேடி தொலையாமல், ஓடி ஒளியாமல் – இயங்கி கொண்டிருப்போம் – ஏனெனில்
இயக்கம் தான் மனிதனின் உன்னதம் – முடக்கமல்ல !

விழித்தால் தான் சில தினங்கள் விடியும்
நடந்தால் தான் எதையும் அளக்கவும் முடியும்.

என்ன செய்வாய் நாளை ? என்று யாராவது கேட்டால்!
சொல்! – இயங்கி கொண்டிருப்பேன் இல்லையேல் இறந்து போயிருப்பேன் என்று