வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் மிக இயல்பாக நடந்து முடிந்து விடுகின்றன. காலம் கடந்த பின்னும் அது நமக்கு பிடித்தவரின் பள்ளி இருக்கை போலவோ அல்லது கல்லுரி இருக்கை போலவோ நெஞ்சிலே தங்கி விடுகிறது.சுமைகளை மட்டுமல்லாது சில சுகங்களுக்கும் இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது மனது, அனைவர் குழந்தைகளையும் அரவணைக்கும் ஒரு ஆசிரியரை போல. எழுத்தாளனும், உவமையும் போல மனதிற்கும், வெளி உலகிற்கும் ஒரு தொடர்போ , இடைவெளியோ ஒரு தொடர்வண்டியை போல் , வலையில் தொங்கி கிடக்கும் [...]